வெள்ளி, 5 ஏப்ரல், 2019

சங்க கால பெண்பாற் புலவர்கள்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலமானது தமிழ் புலவர்களால் நிறைந்திருந்த காலம்.  அக்கலத்தில் ஆண்பாற்புலவர்களுக்கு நிகராக பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாக காணப்பட்டனர்.  சிறந்த பல தனிப்பாடல்களையும், தொகுப்புகளையும் தமிழ் உலகிற்கு கொடுத்துள்ளனர்.  இப்பெண்பாற்புலவர்கள் தன் படைப்பான தனிப்பாடல்களிலோ தொகுப்புகளிலோ தன் இயற்பெயர்களைக் குறிப்பிடப்படவில்லை என்பதை நன்கு அறிந்திருப்பர்.  காரணம் அப்புலவர்கள் புகழையோ பெருமையோ கருதி எழுதப்படவில்லை என்பதை அறியலாம்.  பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர்கள் எவ்வாறு சுட்டப்பட்டதெனில் அவர்கள் எழுதிய பாடல்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்து பெயர் சுட்டப்பட்டது,
பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்களில் நடை, உத்தி, சொல்லாடல்கள் ஆகியவை மிகச் சிறப்பானவை என்று அறிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளது,  இதனை எழுதிய புலவர்கள் யார் என்பது நம்மில் பெருபான்மையோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பாடல்கள் பெயர்பெற்ற அளவிற்கு இயற்றிய புலவர்கள் சிறப்புப் பெறவில்லை என்பதே உண்மை.  அதிலும் பெண்பாற் புலவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை.  எனவே சங்க காலப் பாடல்கள் எழுதி புலவர்கள் குறித்த தகவல்களை அறிந்த கொள்வோம்.
சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.  இவற்றில் பல பெயர்கள் அவர்களது இயற்பெயர்கள் அல்ல.  அத்துடன் சில புலவர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை.  அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41.  இதிலும் பெண் புலவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.  உ.வே.சா. 38 எனவும், எஸ்.வையாபுரிபிள்ளை 30 எனவும், ஒளவை துரைசாமிபிள்ளை 34 எனவும், புலவர்.கா.கோவிந்தன் 27 எனவும், ஒளவை.து.நடநாசன் 41 எனவும், ந.சஞ்சீவி 25 எனவும், அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர்.1  இவ்வாறு பல அறிஞர்கள் பல வகைகளில் புலவர்களின் எண்ணிக்கை வேறுபடுகின்றன.  அப்பெண் புலவர்களின் பெயர்பட்டியல் கீழ்காணுமாறு,
1.அஞ்சியத்தை மகள் நாகையார் 2. அஞ்சில் அஞ்சியார் 3. அள்ளுர் நன்முல்லையார் 4. ஆதிமந்தியார் 5. ஊண்பித்தையார் 6. ஒக்கூர்மாசாத்தியார் 7. ஓளவையார் 8. கச்சிப் பேட்டு நன்னாகையார் 9. கழார்க்கீரன் எயிற்றியார் 10. காக்கைப்பாடினியார் 11. காமக்கானிப் பசலையார் 12. காவற்பெண்டு 13. குழழிஞாழலார் நப்பசலையார் 14. குறமகள் குறியெயினி 15. குறமகள் இளவெயினி 16. குன்;றியனார் 17. தாயங்கண்ணியார் 18. நக்கண்னையார் 19. நல்வெள்ளியார் 20. நன்னாகையார் 21. நெடும்பல்லியத்தை 22. பாரி மகளிர் 23. பூங்கண் உத்திரையார் 24. பூதப்பாண்டியன் தேவியார் 25. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் 26. பேய்மகள் இளவெயினி 27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார் 28. பொன்மணயார் 29. பொன்மணியார் 30. போந்தைப் பசலையார் 31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 32. மாரிப்பித்தையார் 33. மாறோக்கத்து நப்பசலையார் 34. முள்ளியூர்ப் பூதியார் 35. வருமுலையாரித்தி 36. வெண்ணிக் குயத்தியார் 37. வெண்பூதியார் 38. வெண்மணி பூதியார் 39. வெள்ளிவீதியார் 40. வெறிபாடிய காமக்காணியார் 41. வெள்ளைமாளர்.
சங்க காலத்திலேயே இவ்வளவு பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.  இன்றைய காலகட்டத்தில் பல பெண் புலவர்களை நாம் காண்பது எளிது.  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு இணையாக பெண்களும் தங்கள் படைப்புகளை வழங்கியிருப்பதென்பது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்யும் செய்தியாக உள்ளது.  இவ்வதை புலவர்கள் சங்க இலக்கியமான எட்டத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் தங்களுடைய படைப்பபை உருவாக்கியுள்ளனர்.  நாம் ஐந்தொகையில் உள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களில் பயின்றுள்ள மெய்ப்பாடு குறித்த செய்திகளை ஆராய்ந்த அறிவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகையும் பெண்பாற்புலவர்களும் குநற்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.  “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்த உரைக்கப்படுவது.  குற...