வெள்ளி, 5 ஏப்ரல், 2019

குறுந்தொகையும் பெண்பாற்புலவர்களும்

குநற்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.  “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்த உரைக்கப்படுவது.  குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இரப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.  ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகும்.  இரந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக் கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.  ஊரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.  எனவே இந்நூல் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாக கருதப்படுகின்றது.  இது ஒருவகையில் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல்களை ஒத்தத.  இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.  இந்நூல் நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பாகும்.  இது அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது எனலாம்.  இந்நூல் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.  வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன.  பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தே எழும் உணர்களை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.  
குறுந்தொகை சங்க நூல்களில் சிறந்தவையாக வைத்துக் கருதப்படுகின்றது இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.  இவர் பல தொகை நூல்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.  குறுந்தொகையில் பத்துப் பாடல்களுக்கு பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.  19 பாடல்களுக்கு அப்பாடலில் உள்ள சிறப்பான வரிகளை வைத்தே பெயர் சூட்டியுள்ளார்கள். இவர்களை பாடலால் பெயர்பெற்றப் புலவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.  
செவ்வியல் இலக்கியத்தின் மிக உயர்ந்து வளம்பெற்ற நூல்களில் குறுந்தொகை தனித்துவம் மிக்கது.  குறுகிய அடிகளில் செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது.  தொல்காப்பியம் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் புகழ் பெற்றது.
சங்க காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழுந்த மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்கச் சமூக வாழ்வியலில் நிலைபெற்ற கூறுகளான நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, சமூகம், வாழ்வு ஆகியவற்றின் உணர்வு நிலைகளை முன்வைத்தே அமைந்துள்ளது.  எனவே இப்பாடல்களை இயற்றிய புலவர்களுள் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் காணப்படும் உணர்வு நிலைகளன்களை மையம் கொண்டு தொல்காப்பிய பொருளதிகாரம் மெய்பாட்டியல் காட்டும் மெய்ப்பாட்டியலை ஒப்பிட்டு ஆய்வதே இவ்வியலின் முதன்மை கருத்தாகும்.  
குறுந்தொகையில் பெண்பாற்புலவர்கள்
குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களின் எண்ணிக்கை அறுபத்து இரண்டு அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊண்பித்தைகயார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றியார், காக்கைப் பாடினியார், நச்சௌ;ளையார், நன்னாகையார்,  வெண்மனிபூதியார், வெண்பூதியார், வெள்ளிவீதியார், பொண்மணியார், காமஞ்சேர் குளத்தார், நல்வெள்ளியார், நெடும்பல்லியத்தை, பூங்கண்உத்திரையார்,  வருதலையாரித்தி ஆகிய 18 பெண்பாற் கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். 
                       பெண்களும் தங்களுக்கான உணர்வுகளையும் எண்ணன்களையும் வெளிப்படுத்தி இருப்பதை அறிந்தாலும் அவர்கள் முழுமையாக தன் உணர்வை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

சங்க கால பெண்பாற் புலவர்கள்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலமானது தமிழ் புலவர்களால் நிறைந்திருந்த காலம்.  அக்கலத்தில் ஆண்பாற்புலவர்களுக்கு நிகராக பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாக காணப்பட்டனர்.  சிறந்த பல தனிப்பாடல்களையும், தொகுப்புகளையும் தமிழ் உலகிற்கு கொடுத்துள்ளனர்.  இப்பெண்பாற்புலவர்கள் தன் படைப்பான தனிப்பாடல்களிலோ தொகுப்புகளிலோ தன் இயற்பெயர்களைக் குறிப்பிடப்படவில்லை என்பதை நன்கு அறிந்திருப்பர்.  காரணம் அப்புலவர்கள் புகழையோ பெருமையோ கருதி எழுதப்படவில்லை என்பதை அறியலாம்.  பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர்கள் எவ்வாறு சுட்டப்பட்டதெனில் அவர்கள் எழுதிய பாடல்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்து பெயர் சுட்டப்பட்டது,
பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்களில் நடை, உத்தி, சொல்லாடல்கள் ஆகியவை மிகச் சிறப்பானவை என்று அறிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளது,  இதனை எழுதிய புலவர்கள் யார் என்பது நம்மில் பெருபான்மையோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பாடல்கள் பெயர்பெற்ற அளவிற்கு இயற்றிய புலவர்கள் சிறப்புப் பெறவில்லை என்பதே உண்மை.  அதிலும் பெண்பாற் புலவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை.  எனவே சங்க காலப் பாடல்கள் எழுதி புலவர்கள் குறித்த தகவல்களை அறிந்த கொள்வோம்.
சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.  இவற்றில் பல பெயர்கள் அவர்களது இயற்பெயர்கள் அல்ல.  அத்துடன் சில புலவர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை.  அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41.  இதிலும் பெண் புலவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.  உ.வே.சா. 38 எனவும், எஸ்.வையாபுரிபிள்ளை 30 எனவும், ஒளவை துரைசாமிபிள்ளை 34 எனவும், புலவர்.கா.கோவிந்தன் 27 எனவும், ஒளவை.து.நடநாசன் 41 எனவும், ந.சஞ்சீவி 25 எனவும், அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர்.1  இவ்வாறு பல அறிஞர்கள் பல வகைகளில் புலவர்களின் எண்ணிக்கை வேறுபடுகின்றன.  அப்பெண் புலவர்களின் பெயர்பட்டியல் கீழ்காணுமாறு,
1.அஞ்சியத்தை மகள் நாகையார் 2. அஞ்சில் அஞ்சியார் 3. அள்ளுர் நன்முல்லையார் 4. ஆதிமந்தியார் 5. ஊண்பித்தையார் 6. ஒக்கூர்மாசாத்தியார் 7. ஓளவையார் 8. கச்சிப் பேட்டு நன்னாகையார் 9. கழார்க்கீரன் எயிற்றியார் 10. காக்கைப்பாடினியார் 11. காமக்கானிப் பசலையார் 12. காவற்பெண்டு 13. குழழிஞாழலார் நப்பசலையார் 14. குறமகள் குறியெயினி 15. குறமகள் இளவெயினி 16. குன்;றியனார் 17. தாயங்கண்ணியார் 18. நக்கண்னையார் 19. நல்வெள்ளியார் 20. நன்னாகையார் 21. நெடும்பல்லியத்தை 22. பாரி மகளிர் 23. பூங்கண் உத்திரையார் 24. பூதப்பாண்டியன் தேவியார் 25. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் 26. பேய்மகள் இளவெயினி 27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார் 28. பொன்மணயார் 29. பொன்மணியார் 30. போந்தைப் பசலையார் 31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 32. மாரிப்பித்தையார் 33. மாறோக்கத்து நப்பசலையார் 34. முள்ளியூர்ப் பூதியார் 35. வருமுலையாரித்தி 36. வெண்ணிக் குயத்தியார் 37. வெண்பூதியார் 38. வெண்மணி பூதியார் 39. வெள்ளிவீதியார் 40. வெறிபாடிய காமக்காணியார் 41. வெள்ளைமாளர்.
சங்க காலத்திலேயே இவ்வளவு பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.  இன்றைய காலகட்டத்தில் பல பெண் புலவர்களை நாம் காண்பது எளிது.  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு இணையாக பெண்களும் தங்கள் படைப்புகளை வழங்கியிருப்பதென்பது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்யும் செய்தியாக உள்ளது.  இவ்வதை புலவர்கள் சங்க இலக்கியமான எட்டத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் தங்களுடைய படைப்பபை உருவாக்கியுள்ளனர்.  நாம் ஐந்தொகையில் உள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களில் பயின்றுள்ள மெய்ப்பாடு குறித்த செய்திகளை ஆராய்ந்த அறிவோம்.  

மெய்ப்பாடுகளும் அதன் விளக்கங்களும்

தமிழ் இலக்கியவரலாற்றில் தொல்காப்பியத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்றுபெரும் பகுப்புடையது.  இதில் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல் என்னும் இயலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளை வரையறுத்துள்ளார்.  அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பவையாகும்.  தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பிருந்த இலக்கியங்களில் அல்லது அதன் பின்னர் தோன்றிய இலக்கியங்களில் மெய்ப்பாடுகள் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றன.  இவ்வகையில் எட்டுவகை மெய்பாடுகளும் அதன் உணர்வுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சங்கபெண்பாற் புலவர்கள் இம்மெய்ப்பாடுகளைக் கொண்டு செய்யுளில் பல காட்சிகளைக் கையாண்டுள்ளனர்.  சங்க இலக்கியங்களுல் ஒன்றான குறுந்தொகையின் பெண்பாறபுலவர்கள் பாடல்களில் புலப்படும் மெய்ப்பாட்டு உணர்வினை பொருத்தி ஆராய்வதே தனது ஆய்வின் முதன்மைக் கருத்தாக அமைகிறது.
மெய்ப்பாடு–வரையறை
ஐம்பொறிகளின் இயல்பினையும் உணர்வுகளையும் அதன் மூலம் வெளிப்படும் எழுச்சியின் வெளிப்பாட்டையும் அவற்றோடு புற உடல் மாறுபாட்டையும் வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு ஆகும்.
மெய்ப்படுதல் “மெய்ப்பாடு” எனக் கூறலாம்.  “உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் கண் தோன்றும் புற உடற்குறிகள் மெய்ப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.(1)  அதாவது, புலன்களின் வழி அகத்தே உணர்ச்சிகள் ஊடுருவி மெய்யின் மூலமாக வெளிப்படுவது மெய்ப்பாடு என சுட்டப்படுகின்றது.  இதனை “உடலசைவுகளால் வெளிக்காட்டப் பெறும் உள்ளக் கிளர்ச்சியே மெய்ப்பாடு”(2) எனக் கூறுவர்.
செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகிய மெய்ப்பாடு இலக்கியங்களில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது, மெய்ப்பாடு இல்லாத இலக்கியமே இல்லை எனலாம்.  மனிதன் தோன்றிய நாள் முதலே மெய்ப்பாடு காணப்படுகின்றது.  அதன் வளர்ச்சி சிறப்பாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியர் தனது நூலான தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்பாட்டியலுக்கென ஒரு தனி இயலை வகுத்திருப்பதைக் கொண்டு அறியமுடிகின்றது.
இம்மெய்ப்பாட்டியல் இயலின் மூலம் தொல்காப்பியர் மெய்பாட்டை எட்டுவகையில் வரிசைப்படுத்தியுள்ளார். அவையே,
        “நகையேஅழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளிஉவகையென்னும்
அப்பால் எட்டேமெய்ப்பாடென்ப”.    தொல்-பொருள்-
“பாடலில் சுவைபொருள் பொருள் புலப்பாட்டால் தோன்றுவதாகும்”.(3)  உள்ளத்தில் தோன்றும் குறிப்பு உடம்பில் வெளிப்படுவதாக தொல்காப்பியர் எட்டவகைக்குள் மெய்ப்பாட்டை அமைத்துள்ளார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். காரணம் அகவுணர்வானது முகத்தின் வழியே வெளிப்படும் என்பதே.  இதனையே தொல்காப்பியர் நூற்பாவின் வழி எட்டு வகையாக பிரித்த பொருள் தருகின்றார்.
மெய்ப்பாடு குறித்து அறிஞர்களின் கருத்து
       மெய்ப்பாட்டியலுக்கு உறை எழுதிய உரையாசிரியர்களான இளம்பூரணார், பேராசிரியர், ச.சோமசுந்தர பாரதியார் போன்றோர் பலர் மெய்ப்பாட்டிற்கு விளக்கம் தருகின்றனர்.  
   இளம்பூரணர்  “மெய்ப்பாடு” என்ற சொல்லை நோக்கி “மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று”(4) எனக் கூறுகிறார்.
   பேராசிரியர்  “‘மெய்ப்பாடு என்பது பொருட்பாடு’ அதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறு புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்”(5) என விளக்கமளித்துள்ளார் ச.சோமசுந்தர பாரதியார்.  “மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புறவுடற்குறியாகும்”(6) என்பர்.
   “ஒருவரின் உள்ளுணர்வுகளுள் மற்றவர்கள் கண்டும் கேட்டும் அறிந்திட வெளியிற் காணும் உடற்குறிகள் வாயிலாக புலப்படுத்தப்படுபவையே மெய்ப்பாடு எனப்படும், என்றும் பாட்டில் வெளிப்படும் புலவனின் உணர்ச்சி வெளிப்பாட்டை மெய்ப்பாடு எனலாம்”(7) என்றும் மெய்ப்பாடு குறித்து அறிஞர்கள் பலவாறு எடுத்துரைத்துள்ளனர் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவதே மெய்ப்பாடாகும் என்பதை,
      “உள்ள நிகழ்ச்சி நிகழ்ந்தவாறே உய்த்துணர வேண்டிய தேவை இல்லாமல் கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் ஆகிய புறச் சலனங்கள் மூலமாக வெளிப்படுவதே மெய்ப்பாடு” என்றுரைக்கின்றார் நச்சினார்க்கினியர்.
     மேலும் “பயனே மெய்ப்பாடு எச்சவகையினாக”(8) என மெய்ப்பாட்டை செய்யுள் உருப்புகளாக குறித்துள்ளனர்.  பேராசிரியர் தமது உரையில் “மெய்ப்பாடென்பது சொற்கேட்டார்க்கும் பொருள் கண்கூடாதல்”(9) என்று கூறியுள்ளார்.
     “ ‘மெய்’ என்பது பொருட்பிழம்பு ‘பாடு’ என்பது தோன்றுவது.  கவிதை தான் மெய்யாகிய பொருட்பிழம்பைத் தோற்றுவிக்கிறது”.(10) எனச் சொற்பொருள் விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள்.
     மனிதன் மனவுணர்வுகளை உடம்பில் வெளிப்படுத்தும் பொழுது மெய்ப்பாடு என்கிறோம்.  செய்யுளில் இலக்கியத்தை படிக்கும் பொழுது மனக்கண்ணால் மெய்ப்பாடு தோன்றும்படி இலக்கிய நூலார்கள் அமைத்துள்ளனர்.  அதே போல் கவிதை எழுதுவோரும் கவிதைப் படித்தும் மெய்ப்பாடு தோன்றும்படி கவிதை புனைவர் காரணம் உள்ளத்து உணர்வினை தூண்டுவதே ஆகும்.
  படிப்போரின் மனதில் கவிதையை பதிய வைப்பது இந்த மெய்ப்பாடே அனுபவ வெளிப்பாடே கவிதை எனும்போது, அனுபவங்களில் மெய்ப்பாடு இருப்பது இயல்பே ஆகும்.
மெய்ப்பாடு குறித்து இலக்கண நூல்களின் கருத்துக்கள்
பண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்புகளையும் அவற்றில் உண்டாகின்ற புறவெளிப்பாடுகளையும் எடுத்துரைப்பது மெய்ப்பாடாகும்.  இம்மெய்ப்பாட்டினை தொல்காப்பியர் ஒரு இயலுக்குள் அடக்கியுள்ளனர்.  மேலும் பிற இலக்கிய நூல்களும் மெய்ப்பாட்டிற்கு விளக்கம் தருகின்றது.
தண்டியலங்காரம்
தொல்காப்பியத்திற்கு பின் வந்த முதல் அணி இலக்கண நூல் தண்டியலங்காரம்.  செய்யுளுக்குரிய இன்றியமையாத உறுப்பான அணிகளில் சுவையணி என்ற மெய்பாட்டைத் தண்டியாசிரியர் குறிப்பிடுகின்றார். 
“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற 
 எண்வகை  மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே”(11)
அவைதாம்,
 “வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
  காமம் அவலம் உருத்திரம் நகையே”(12)
இவற்றின் எண்வகை மெய்ப்பாடானது வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை ஆகியன என்பது தண்டியலங்காரக் கருத்து.
அதாவது மனநிலையில் உணர்வுகளால் புறத்தில் எழும் தன்;மை கொண்ட மெய்ப்பாடானது சுவையென்னும் மெய்ப்பாடேயாகும் என்று வலியுறுத்துகிறது.
நம்பியகப்பொருள்
தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த இலக்கண நூலே நம்பியகப்பொருள்.  இந்நூல் தொல்காப்பியத்தையொட்டியே மெய்பாடுகளை கூறுகிறது.
“திணையே கைக்கோள் கூற்றே கேட்போர்
 இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பாடு எச்சம் பொருள் வகை துறை என்று 
அப்பால் ஆறிரண்டு அகப்பாட்டுறுப்பே”(13)
“நகை முதலாம் இருநான்கு மெய்ப்பாடும் 
 நிகழ்பொருள் மெய்ப்பட நிற்பது மெய்ப்பாடே”(14)
தொல்காப்பியர் மெய்ப்பாட்டைக்  செய்யுளுறுப்புகளுள் ஒன்றான கூறுகிறார்.  அகச்செய்யுள் புறச்செய்யுள் என்றோ கூறவில்லை.  நம்பியகப் பொருள் அகப்;பொருளுக்கே உரிய நூலாக உள்ளதால் பன்னிரண்டு அகப்பாட்டுறுப்புகளைப் பட்டியலிட்டு அதில் மெய்ப்பாட்டை விளக்கியுள்ளது.  
ஐந்திலக்கண் ந}ல் என்னும் சிறப்பு பெற்ற இலக்கண விளக்கம் தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் எடுத்துரைப்பதால் குட்டி தொல்காப்பியம் என்றும் கூறுவதுண்டு.  இந்நூல் மெய்ப்பாட்டை சுவை என்றே கூறுகிறது.
“உள்நிகழ் தன்மை புறத்துததோன்ற
      என்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவை அது
      காமம் அவலம் உருத்திரம் நகை என
      இயல்பிப் போந்த இருநான்கு வகைத்தே”(15)
தண்டியலங்காரத்தைப் பின்பற்றிக் காமம் முதலிய எண்வகை மெய்ப்பாடுகளையே இலக்கண விளக்கம் கூறுகிறது.
தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட தொன்னூல் விளக்கமானது, அணியிலக்கண நூல்களுல் ஒன்று மெய்ப்பாட்டை அணியாக வரிசைப்படுத்துகிறது இந்நூல்.
“சுவையணி என்ப கடுஞ்சினம் காமம்
      வியப்பு அவலம் இழிவு அச்சம் வீரம் நகை என
      எண்மெய்ப்பாட்டின் இயைவன கூறி 
      உள்மெய்ப் பாட்டை உணர்த்தித் தோன்றவே”(16)
நெஞ்சக் கருத்துக்களை காட்டும் புறக்குறி என விரித்துரைக்கின்றது.  மேலும் தொல்காப்பியர் கூறியுள்ள உவகையுள் அடங்கும் காமத்தை தனியொடு மெய்பாடகவும், பெருமிதத்தில் உள்ளடக்கும் வீரத்தை தனியொரு மெப்பாடாகவும் வரையறுக்கிறது.
முத்துவீரியம்
ஐந்திலக்கண நூலான முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாரால் எழுதப்பட்டுள்ளது இந்நூல் வடமொழி இலக்கண மரபை அடியொட்டிச் செல்கின்றது.
“புந்தியின நிகழ்திறன் புறத்துப் புலனாய் 
      விளங்கல் எண்வகை மெய்ப்பாட்டாலும்
      ஒழுகல் சுவையென உரைக்கப்படுமே”(17)
உள்ளத்து உணர்வுகள் வெளிப்படையாக விளங்க எட்டுவகை மெய்ப்பாடுகளாக அமைவது - சுவையணி.
“அவைதாம்
      அச்சமும் வீரமும் அவலமும் காமமும்
      இழிப்பும் வியப்பும் எழில்படு நகையும்
      உருத்திரமும் மெனஉரைக்கப்படுமே”(18)
முத்துவீரியம், காமம், வீரம் இவற்றைத் தனித்தனி மெய்ப்பாடுகளாகக் கூறுகின்றது.  
மாறனலங்காரம்
திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் மாறனலங்காரம் எழுதப்பெற்றுள்ளது மெய்ப்பாட்டைச் “சுவை” என்ற கூறுகிறது.  மேலும் மெய்ப்பாடடை சுவையுணர்வினை எடுத்தியம்புகிறது.
“பொறியுணர் வொடும் ஒரு பொருளினை எதிர்ந்த
      நெறியுடைமனத்து நிதழ்தரு பான்மை
      அயல்வர் உறப்புறுததாய்ப் பொருள் எட்டின் 
      இயல்வது சுவை என்று இயம்பினர் புலவர்”(19)
அவைதாம்
“பெருமிதம் நடுக்கம் அழுகை இளிவரல்
      உருத்திரம் நகை வியப்பு காமமெனும் வகையே”(20)
மாறனலங்காரம் தொல்காப்பியம் கூறியதுபோல் பெருமிதம் என்று தனி மெய்ப்பாடாகக் கூறுகிறது.

தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள்
உலகில் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூலாகும்.  தொல்காப்பியர் இயற்றிய தொல்;காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பகுதிகள் காணப்படுகின்றன.  இந்நூல் 1602 நூற்பாக்களால் ஆனது.  இதில் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் ஆறாவது இயலை மெய்ப்பாட்டிற்கென வடிவமைத்துள்ளார்.
மேலும் மெய்ப்பாட்டின் என்ற சொல் தற்காலத்தில் சுவை என்ற பொருளை குறிக்கின்றது.  உள்ளத்திலும் உடலிலும் மெய்ம்மயிர் சிலித்தல், கண்ணீர், அரும்பல், வியர்த்தல் என வெளிப்படும் போதுதான் அவை பிறருக்கு புலப்படுகின்றன.  அவ்வாறு புலனாகும் சுவைகள் எட்டு என்று வகைப்படுத்தியுள்ளார்.
அவையே,

      “நகையே அழுகை இளிவரல் மருட்கை
      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று 
      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”  (தொல்.மெய்.1197)
நகைச்சுவை, அழுகைச்சுவை, இளிவரல்சுவை, மருட்கைசுவை, அச்சச்சுவை, பெருமிதச் சுவை, வெகுளிச்சுவை, உவகைசுவை என்பன மெய்ப்பாடாகும்.  இங்கு வரையறுத்து கொடுக்கப்பட்ட எட்டு வகை சுவை உணர்வுகளையும் ஒவ்வொரு சுவைக்கும் நான்கு பிரிவுகள்  வீதம் 32 மெய்ப்பாடு குறிப்பிட்டுள்ளனர்.  அவற்றை பின்வருமாறு காண்போம்.
நகை தோன்றும் இடங்கள்
நகை என்பது சிரிப்பு, மனிதரோடு மனிதரை இணைக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு.  இச்சிரிப்பு கவலையை விரட்டும் பொருளாகவும் கேலி செய்யும் பொருட்டாகவும் அமைகின்றது.  தொல்காப்பியர் நகை என்பதை, பிறருடைய ஏளனத்திற்கு ஒருவர் ஆளாதல் அதாவது எள்ளி நகையாடுதல் என்றும் இளமையால் உண்டாகின்ற மழலையர் குறித்த நகை, அறிவின்மை காரணமாக தோன்றுகின்ற நகையாகிய பேதமை, ஒன்றை மற்றொன்றாக உணர்தல் போன்ற நான்கின் அடிப்படையில் வகுத்துள்ளார்.
அவையே,
“எள்ளல் இளமை பேதமை மடன் என்று
          உள்ளப்பட்ட நகை நான்கு எனப”  (தொல்.மெய்.1198)
என்று கூறப்பட்டுள்ளமை காண்க.  மேலும் நகை என்பதை 
“நகைச்சுவைக்குரிய பொருளைப் புறத்தே நகையுடன் அகத்தே மன மலர்ச்சியாகிய மகிழ்ச்சி தோன்றுமாறு வருவது நகை என்னும் மெய்பாடு” என்கிறார் வெள்ளைவாரணன்
“நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பு என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.  நகை என்ற சொல்லுக்குத் திருமகள் தமிழகராதி, சிரிப்பு, இன்பம், மதிப்பு, இனிப்பு, இகழ்ச்சி, நட்பு, விளையாட்டு, மலர், பல், பல்லீறு, முத்து, அணிகலன் சிரியென்வேல்” என்று பதிமூன்று பொருட்களைத் தந்துள்ளது.  நகை என்ற சொல்லிற்கு நகைபடு பொருளைக் காணும்போது முறுவலாடு வரும் மகிழ்ச்சி என்று நம்மால் அறிய முடிகிறது.
இங்க நகைச்சுவைக்குக் காரணமாகிய எள்ளல், இளமை, பேதைமை, மடம் பொருள்களின் நிலைக்களம் பிறர்கண் என்றோ தன்கண் என்றோ கூறப்படாது பொதுப்பட நின்றமையால் இவற்றுக்குப் பிறர் கண்ணும் என இரண்டும் நிலைக் கருத்து தெரிவித்துள்ளார், க.வெள்ளைவாரணன்.
தொல்காப்பியர் கூறப்பட்டுள்ள உள்ளப்பட்ட நகை என்று வலியுறுத்திக் கூறியிருப்பதனால், மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகை ஒன்றேயாயினும், தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக்குறிப்புகளும் நுண்ணிதாகப் புலப்படுவதற்குரிய நிலையில் உள்ளன என்பது பொருள் என்பதை க.வெள்ளைவாரணன் தன் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
அழுகை தோன்றும் இடங்கள்
அழுகை என்பது அவலச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவையின் எதிர்சுவை அழுகை நம் சுற்றத்தினரோ நட்பினரோ நெருங்கிய தொடர்பினரோ இறப்பு பற்றி கேட்கும்போது நேரில் சென்று பார்க்கும் பொழுது நாம் நம்மையறியாமலே கண்ணீர் மல்கிக் கதறி அழுகின்றோம்.  காரணம் அன்பினை அடக்கும் கதவுகளோ தடைகளோ இங்கு இல்லை என்பதே.
தொல்காப்பியர் இதனை,

    “இளவே இழவே அசைவே வறுமை என
     விளிவில் கொள்கை அழுகை நான்கே”  (தொல்.மெய்.1199)
பிறரால் தாழ்வு படுத்தப்பட்டு எளியராய் நிற்கும் அவல நிலையாகிய இளிவு உயிரிழப்பு பொருளிழப்பு போன்ற இழவு, செல்வராக இருந்த நிலை மாறி வரியராகுதல் என்ற அசைவு, உயர்ந்த நிலையிலிருந்தவர் தாழ்வுபடுதல் போன்ற வறுமை என நான்கு வகைகளில் சுட்டியுள்ளார்.
அழுகை என்ந சொல்லுக்குத் திருமகள் தமிழகராதி நெஞ்சின் துயர் தாளாது கண்களில் நீர் பொருளினைத் தந்துள்ளது.
இளிவரல் தோன்றும் இடங்கள்
இளிவரல் என்பது பிறரால் இழக்கப்படுவது.  முகம்சுழித்தலால் உண்டாகின்ற முகமாற்றத்தையே இளிவரல் எனலாம்.  ஒரு நோயாளியையோ பிணத்தையோ காணும் போது உள்ளத்தில் உண்டாகின்ற அருவருப்பு காரணமாக முகம் சுளித்தல் ஏற்படுகின்றது.
இதனை,
“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
          யாப்புற வந்த இளிவரல் நான்கே”  (தொல்.மெய்.1200)
முதுமையை இகழ்வோடு பார்க்கும் மூப்பு தீராத பிணியால் ஒருவர் இழிவாக பார்க்ப்படுவதால் உண்டாகும் இளிவு, பயனற்ற முயற்சிகளால் இளிவுற தோன்றும் இளவு, வலிமையின்றித் தோல்வி அடையும் இளிவு என நான்கு வகைக்குள் இளிவரலை தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
இளிவரல் என்ற சொல்லுக்குத் திருமகள் தமிழகராதி இழிவு, இழிப்புச்:சுவை என்ற இரு பொருட்களைத் தந்துள்;ளது.

மருட்கை தோன்றும் இடங்கள்
மருட்கை என்பது வியப்பு.  இச்சொல் நான்கு வடிவங்களில் உணர்த்தப்படுகிறது.  புதுமை முன்பு காணாததைக் கண்டாலும் மனம் மருளும் வியப்புண்டாகும் அளவு கடந்து பெருமை பெற்றவை, மிகமிக நுண்ணியதாய் விளங்கும் சிறுமை ஒன்றனியம் காணப்படும் புதிய ஆக்கம் என்ற நான்கு வகையில் மருட்கை சுவையை தொல்காப்பியர் வகுத்துள்ளார்.
அவையே,
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
         மதிமை சாலா மருட்கை நான்கே”  (தொல்.மெய்.1201)
இவை அறிவக்கு எட்டாத அளவு முன்பு காணாதவையாய் புதிதாய்க் காணப்படுவதாக அமையுமாயின் அதுவே வியப்பு.
மனித வாழ்க்கையில் அடுத்தடுத்த நேரத்திற்கு நேரம் எண்ணமும் அது பற்றிய சிந்தனைகளும் வேறுபட்டிருப்பது இயல்பே.  ஒரு நேரத்தில் இருக்கும் எண்ணங்கள் மற்றொரு நேரத்தில் இருப்பதில்லை மனிதன் ஒரு சமயத்தில் ஒன்றைக் கண்டு வியப்படைகிறான்.  மறுநேரத்தில் வேறொன்றைக் கண்டு வேதனை கொள்கின்றான்.  இதனை விடுத்து மற்றொரு நேரத்தில் இன்னொரு பிரச்சனைகளைக் கண்டு இரக்;கப்படுகிறான்.  இவ்வாறு மனித உள்ளத்தில் பல்வேறு உணர்வுகள் அடுத்தடுத்துத தோன்றிய வண்ணம்; இருக்கின்றன.
அவ்வாறு தோன்றும் உணர்வுகள் ஒன்றே “மருட்கை” ஆகும்.  இதனை “வியப்பு” என்றும் வழங்குவர்.
மருட்கை என்னும் மெய்ப்பாடு மனிதனின் மன உணர்வை ஒரு நிலையில் நிற்கச் செய்யாது உலகில் பலவாறு திரிந்து வேறுபாடுக் கொள்ளச் செய்வதாகும்.  மண  உணர்வு உலகில் ஒரு நிலையில் நில்;லாது புதுமை, பழைமை, விவேகம் போன்றவற்றால் மாறுபடும் தன்மையுடையது.  புதிதாக ஒன்றை பார்த்தவுடன் புத்துணர்ச்சி பெற்று விவேகமடையும் தன்மையே மறந்து இன்பம் அடைகிறது.  இப்புத்துணர்;ச்சியே மருட்கையுணர்வு என்றும் வியப்புணர்ச்சி ஆகவே வியப்பு என்றாலும் மருட்கை என்றாலும் வியப்பு என்றாலும் ஒரு பொருளினையையே குறிக்கிறது எனலாம்.
அச்சம் தோன்றும் இடங்கள்
அச்சம் என்பது பய உணர்வினைக் குறிக்கின்றது. தெய்வம் என்றும் பேய் என்றும் நம்பி அஞ்சுதல்.  சிங்கம், புலி, கரடி, வெறி நாய்களுக்கு அஞ்சுதல், திருடர்;களுக்கு அஞ்சுதல், தமக்கு மேலதிகாரிகளுக்கு அஞ்சுதல், “தம் இறை” என்றதன் நுட்பம் அவரவர் மேலேயுள்ளவர்களுக்கு அஞ்சநேரும் செயலை குறிக்கிறது.
இதனையே,
“அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்
     பிணங்கல் சாலா அச்சம் நான்கே”  (தொல்.மெய்.1202)
என்று விளக்கியுள்ளார்.
அச்சம் என்ற சொல்லுக்குப் “பயம், தகடு, இலேசு, அகத்தை, சரிசிமானம், பளிங்கு, முதலான பொருட்கள் உள்ளது.  ஆனால் பொதுவாக அச்சம் என்பதற்கு “பயம்” என்ற பொருளெ கொள்ளப்படுகிறது.  உணர்வு  என்பது மனிதநிடையே இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது.  அது எத்தகைய அச்ச உணர்வாயினும்; அவை மன உணர்வினால் ஏற்படுகின்ற இன்னல்களே என்பது புலனாகின்றன.
அச்சம் என்பது மெய்ப்பாடு மிகவும் கொடுமை வாய்ந்ததாகும்.  அச்சமானது வாழ்வின் முன்னேற்றறத்திற்கு தடைபடுவதாகும் இவ்வகையான மெய்ப்பாடு இல்லாத உயிர்களைக் காண்பது அரிது என்று கூறினாலும் அவை மிமையாகாது.  ஓவ்வவொரு உயிர்களும் அச்சத்தோடு தான் வாழ்கின்றன.
உயிரினங்கள அனைத்தும் அச்சம் கொண்டு என்னும் நோக்கில் பார்க்கப்படினும் அவற்றில் சில சேறுபாடுகள் உண்டு.  உயிரினங்களில் ஓர் உயிர் தன்னைவிடஉருவம், வலிமை ஆகியவற்றால் பெரியதாக உள்ள மற்றொரு உயிரைக் கண்டபோதோ அல்லது மனிதனைக் கண்டபோதோ இயல்பாக அச்சம் கொள்ளும் நிலையில் உள்ளன.  ஆனால் மனிதன் அவ்வாறு இல்லை.  உயிர்களைக் கண்டால் அச்சம் கொள்கின்றான்.  புpற மனிதர்கள் தன்னைவிட சிறிய உருவம் குறைந்த வலிமை கொண்ட உயிர்;கள் மீது அன்பு செய்கின்றான்.  காரணம் மனித மனமானது எப்போது ஒரே நிலையில் அமைதியோ வன்மையோ கொண்டிருப்பதில்லை அவ்வகையில் அச்சம் என்பதும் எல்லோரிடமும் இயல்பாக இருக்கும் பண்புநிலையோ ஆகும்.
பய உணர்வை தரக்கூடிய அச்சமானது முதலில் சொல்லப்பட்டுள்ள அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என்ற நான்கின் இடத்திலும் வெளிப்படுகின்றன என்பது இங்கு வெளிப்படையாகிறது.
பெருமிதம் தோன்றும் இடங்கள்
அச்சச் சுவைக்கு அடுத்ததாக பெருமிதம் என்பதை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.  காரணம் அச்சமானது ஒரு மனிதனை எந்த அளவிற்கு முடக்கப்படுகிறதோ அதேப்போல் பெருமிதமானது ஒரு மனிதனை புகழ், சிறப்பு ஆகியவற்றால் முடக்கத்திலிருந்து வெளிவரச் செய்பவையே.  எனவே அச்சத்திற்கும் பெருமிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பெருமிதம் என்னும் சொல்லிற்கு மேம்பாடு, உள்ளக்களிப்பு என்ற பொருள்களைத் திருமகள் தமிழகராதி விளக்கம் தருகின்றது.  மிகுந்த புகழ், இன்பம், பொருள் ஆகியவை கொண்டு சிறப்பு பெற்றிருப்பவராயினும் அவர்களுக்கு பழிச்சொல் வந்து சேராத முறையில் வாழ்வதற்கு கல்;வியோ, அஞ்சாமை, புகழ், கொடை முதலியவை வெளிப்படுவதே காரணமாகும்.
இதனையே,
“கல்வி தறுகண் புகழ்மை கொடையென
         சொல்லப்பட்ட பெருமிதம நான்கே”  
பெருமிதம் என்பது வீரம்.  இவ்வீரமானது எத்தகைய வடிவில் அமைகிறது என்பதை பகுத்து ஆராய்ந்து தொல்காப்பியர் கல்வி, தறுகண், புகழ், கொடை என்ற நான்கு அடக்குகின்றார்.  படிப்பறிவு, நூலறிவு  கல்வியின் பொருட்டு ஏற்படும் பெருமிதம், போரில் எதிர்பட்டு வென்று வீழ்த்திய வீரம் காட்டும் பெருமிதம், பிறருக்கு அஞ்சாது தூய நல்ல அரிய செயல்களை செய்துகாட்டி அதனால் வெளிப்படும் புகழ் கொண்ட பெருமிதம் ஈதல் பொருட்டு உயிரும் உறுப்பு பொருளும் கொடுப்பதால் உள்ள பெருமிதம் ஆகிய நான்கு பெருமிதத்திற்கு அடிப்படையாகும்.
அச்சம் என்பது உள்ளத்திற்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றலாகும்.  பெருமிதம் என்பது அதே உள்ளத்திற்கு இன்பம் பயக்கும் ஆற்றல் வாய்ந்தது.  பொதுவான மனிதன் இன்பத்தையே விரும்பவல்லது.  காரணம் துன்பம் தன்மை மெலியச்செய்கிறது. இன்பமோ தம்மை பெரமைபடுத்துகிறது.  மனிதன் இன்பமாகவோ மகிழ்ச்சியாகவோ உள்ள பொழுது எடுப்பான தோற்றத்தையும் நிமிர்;ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் காணப்படுவதை நாம் அறியலாம்.
பெருமிதம் என்ற சொல் பொதுவாக மேம்பட்டுத்தோன்;றுதல் என்று பொருள்படுகின்றன.  பொதுவாக மனிதர்களுள் பெரும்பான்மையோர் வாழ வேண்டும் என்றே விரும்பி கொள்கின்றனர்.  ஆதன் விளைவாக வாழ்வில் 
மேம்பட்டு வாழும் பொழுது உண்டாகும் வாழ்வே பெருமித வாழ்வு.;  இன்று மேம்பாடைந்து முன்னேற்ற வாழ்க்கையில் பொருளாதார மேம்பட்டு வாழும் வாழ்வே வேண்டும் என்று எண்ணுகின்றனர்.  கல்வியறிவால் மேம்பட்டு வாழ்தல் வேண்டும்.  புகழால் மேம்பட்டு வாழ்தல் வேண்டும்.  எனவும் பலவகையில் மற்றவர்களைவிட மேம்பட்டு வாழ்தல் வேண்டும் என்றே எண்ணி அள்ளும் பகலும்; உழைப்பவர்களை நாம் காணமுடிகின்றது.  எப்படியாவது நாம் மற்றவரைவிட உயரவேண்டும் என்பதற்காக பிறர் நலநன கெடுத்தல் களவாடல் தீமைபுரிதல் பொய் முதவை முலியனவற்றை கூறி வாழும் மனிதர்களையும் பார்க்கின்றோம்.  இவையெல்லாம் இன்றைய உலகில் பெருமிதம் - மேம்பாடு நோக்கிய வாழ்வு முறையாக உள்ளது.
தொல்காப்பியர் பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டினை  “வீரம்” என்பதன் அடிப்படையில் வகுத்துள்ளார்.  இதனை தறுகண் என்றும் கூறுவர்.  தறுகண் என்ற சொல்லிற்கு “அஞ்சாமை” என்று பொருள்.
பெருமிதம் என்னும் மெய்ப்பாடு கல்வியாலும், அஞ்சாமையாலும், புகழினாலும், கொடையினாலும் வெளிப்படும் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.
பெருமிதம் என்பது யாவரோடு ஒப்ப நில்லாது மேம்படுதல்என பொருள்படும்.  கல்வி என்பது மாந்தர்க்குக் கண்ணெனத் தகும். கண்ணுடையன் என்போன் கற்றோன்.  இதுபோல கல்வி பற்றிய பெருமிதம் தறுகண் என்பது அஞ்சத்தக்கன கண்ட இடத்தில் அஞ்சாமையாகும்.  புகழ்மை என்பது இன்பமும் பொருளும் அளவு கடந்து கிடைப்பதாயினும் பழியொடு வரும் செயலைச் செய்யாதிருத்தல் கொடை என்பது உயிரும் உடம்பும் முதலிய எல்லாப் பொருட்களையும் கொடுத்தல்.  இங்கு கூறப்பட்டுள்ள மெய்ப்பாடு இணைந்தவை.
வெகுளி தோன்றும் இடங்கள்
வெகுளி என்பது கள்ளம், கபடம் அறியாத சூது வாது தெரியாத அப்பாவி மனிதர்களை வெகுளி என்று சொல்லி வருகின்றனர்.  வெகுளியான ஒரு மண்ணும் தெரியாது என்று ஆண் பிந்;தையை சுடுவதுண்டு.  எனவே வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்;மை என்று கருதலாம்.
வெகுளி ஒருவருக்கு வருமானால் அவர் தன்னிலையிலிருந்து அறவே மறந்து செயல்படுவர்.   ஆவர் நிலையை மறந்து, அறிவை இழந்து, நிறைந்து தம் மனம் போனப்படியெல்லாம் பேசத்தகாத வார்த்தைகளை பேசுவர்.  செய்யத்தகாத வகையிலெல்லாம் செயல்படுவார்.  அவ்வாறு அவர் வெகுளியினால் செயல்படும் பொழுது அவருடைய உடலிலும் வேறுபாடுகள் தோன்றுகின்றன.  இதனை வெகுளியின் வழிஆராய்ந்து தொல்காப்பியர்,
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
         வெறுப்ப வந்த வெகுளி நான்கே”  (தொல்.மெய்.1204)
என்ற நான்கு நிலைகளெ வெகுளி தோன்றுவதற்கான நிலைகளன்கள் என்று குறிப்பிட்டுள்ளார். உறுப்பறை உறுப்புகளை அறத்தல், அஃதாவது யாக்கையின் உறுப்புகளாகிய கையினை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் முதலிய கொடுஞ் செயல்கள் குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் அவருடைய சுற்றத்தாருக்கும் கேடு சூழ்தல் அலை என்பது அரசியல் நெறிமுறைக்கு மாறாகக் கோல் கொண்டு அலைத்தல் முதலிய தீத்தொழில்கள் கொலை என்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைகளை அழித்துப் பேசுதல் இவ்வாறு நால்வகைபபடக் கூறப்பட்ட இக்கொடுந் தொழில்கள் காரணமாக மனித மனதில் வெகுளி தோன்றுவது இயல்பு.
வெகுளி என்னும் சொல்லிற்கு திருமகள் அகராதி சினம், வெறுப்பு, கபட மில்லாதவர் வெகுளி என்பது சினம் என்னும் பொருளினையே குறிக்கும்;.
வெகுளி ஒவ்வோர் உயிருக்கும் உண்டு உயிர்கள் ஒன்றோடு ஒன்று போரிடக் காரணமாக உள்ளது வெகுளி தான்.  “கோபம் குணத்தைக் கெடுக்கும்” “ஆத்திரமானது அறிவை மலுங்கடிக்கும்”என்ற வரிகள் அனுபவத்தால் அறிந்தவை.  இருப்பினும் சமயச் சூழல் காரணமாக மாந்தர்கள் கோபம், ஆத்திரம், சினம் என்றெல்;லாம் அழைக்கப்பெறும் வெகுளியை வெளிப்படுத்துவது உண்டு.
வெகுளி கொள்வதில் மற்ற உயிர்களுக்கு மாந்தர்களுக்கு வேறுபாடு உண்டு.  வெகுளி அறிவை இழக்கச் செய்துவிடும்.  வெகுளி இன்றி வாழ்ந்தால் வளமுடன் வாழலாம் என்று சான்றோர் கூறுவதுண்டு.  இதனை பயன்படுத்தியே மனிதர்கள் வாழ்நாள் அளவை பெருக்கி வாழ்வை வளம் பெறச் செய்கின்றனர்.  ஆனால் ஏனைய உயிரினங்கள் இத்தகைய நிலையினை எண்ணாது விரைவிலேயே அழிவைத் தேடிக்கொள்கின்றனர்.  இதில் வெகுளி என்பது மளித வாழ்வில் நான்கு நிலைகளில் ஏற்படுகின்றன.  அவை உறுப்பறை, குடிகோல், அலை, கொலை என்ற நான்கு இடங்களே ஆகும்.  உறுப்பறை என்பது கை, கால், கண் முதலியவற்றைக் குறைத்தல்.  குடிக்கோள் என்பது மனைவி, சுற்றம், குடிபிறப்பு ஆகியவற்றிற்றுக் கேடு சூழ்தலாகும்.  அலை என்பது கோல் கொண்டு துன்புறுத்தல் முதலியவையாகும்.  கொலை என்பது கொல்லுதல் தன்மை குறிக்கும் செயலாகும்.
உவகை தோன்றும் இடங்கள்
உவகை என்பது களிப்பு என்பர்.  திருமகள் தமிழகராதி மகிழ்ச்சி, களிப்பு, அன்பு, காமம், இன்பச்சுவை என விளக்கம் தருகின்றது.  மகிழ்ச்சி, அன்பு, இன்பம் என்று சொல்லக் கூடிய உவகை என்பது பெரும்பாலும் காம இன்பத்தின் கண் சேர்ந்துரைக்கப்படுள்ளது.  பொதுவாக எல்லோராலும் சிறந்த மெய்ப்பாடு என போற்றப்படுகிறது.  காரணம் இம்மெய்ப்பாடு மனித உள்ளத்திற்கும், உடலுக்கும், வாழ்விற்க்கும் ஆக்கமும் ஊக்கமும் தருபவையாகும்.
உவகை மெய்ப்பாடானது செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றுகின்றன.
அவையே,
      “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று 
      அல்லல் நீத்த உவகை நான்கே”   (தொல்-பொருள்-1005)
செல்வம் என்பது பல்வகைப் பொருகளும் அவற்றின் நுகர்ச்சியும்.  புலன் என்பது கல்விப் பயனாகிய அறிவுடைமை.  புணர்வு என்பது காமபுணர்ச்சி.  விளையாட்டு என்பது ஆறு, குளம், சோலை முதலியவற்றில் விளையாட மகிழ்தல்.
அல்லல் நீத்த உவகை என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதை காணும்போது துன்பத்தை நீக்கும் பொருள் உவகை என்பது புலனாகின்றன.
முடிவுரை
         சங்க இலக்கிய காலம் தொட்டே மெய்ப்பாடென்பது சிறந்த இடத்தைப் பெற்று வந்துள்ளமையை அறியலாம். மெய்ப்பாடு மனிதன் தோன்றிய நாள் முதலே தோன்றி வளர்ந்துள்ளது.


அடிக்குறிப்பு
1. மு.பொன்னுசாமி – சங்க இலக்கியத்தில் மெய்ப்பாடு.ப.எண்- 1
2. டீ.ஜி.என்.தாசன் - சிலம்பில் மெய்ப்பாடுகள்.ப.எண்- 1
3. தூh
4. முனைவர்.ஜெ.சியாமளா, சங்ககால அரசு உருவாக்கம்.ப.எண்- 32
5. மேலது ப.எண்- 32
6. க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல் உரைவளம்.ப.எண்- 6
7. தொல்காப்பி பூங்கா.மு.கருணாநிதி.ப.எண்- 9
8. பொய்மையை அறிந்து விலக்குதல் (திருக்குறள் காட்டும் மெய்யறிவு)
9. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கை நூற்பா 1259.ப.எண்-14
10. மேலது ப.எண்- 15
11. மேலது ப.எண்- 21
12. கொ.இராமலிங்கத் தம்பிரான் தண்டியலங்காரம், தண்டி- பொருள்.ப.எண்- 144
13. மேலது ப.எண்- 70
14. நாற்கவிராச நம்பி, நம்பியகப்பொருள், நூற்பா 231.ப.எண்- 270
15. மேலது ப.எண்- 270
16. ச.வே.சுப்ரமணியன் தொன்னூல் விளக்கம்.அணி 361, ப.எண்-166
17. இலக்கண விளக்கம் பொருள் (அணி 665)
18. கு.சுந்தர மூர்த்தி, முத்துவீரியம் நூற்பா-1241
19. மேலது நூற்பா-1242
20. ஆ.இ.நாராயணங்கார் நூற்பா உரை மாறனலங்காரம், நூற்பா- 197

குறுந்தொகையும் பெண்பாற்புலவர்களும் குநற்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.  “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்த உரைக்கப்படுவது.  குற...