குறுந்தொகையும் பெண்பாற்புலவர்களும்
குநற்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்த உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இரப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகும். இரந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக் கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். ஊரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. எனவே இந்நூல் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாக கருதப்படுகின்றது. இது ஒருவகையில் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல்களை ஒத்தத. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூல் நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பாகும். இது அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது எனலாம். இந்நூல் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தே எழும் உணர்களை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.குறுந்தொகை சங்க நூல்களில் சிறந்தவையாக வைத்துக் கருதப்படுகின்றது இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் பல தொகை நூல்களுக்கு பாடல் எழுதியுள்ளார். குறுந்தொகையில் பத்துப் பாடல்களுக்கு பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. 19 பாடல்களுக்கு அப்பாடலில் உள்ள சிறப்பான வரிகளை வைத்தே பெயர் சூட்டியுள்ளார்கள். இவர்களை பாடலால் பெயர்பெற்றப் புலவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
செவ்வியல் இலக்கியத்தின் மிக உயர்ந்து வளம்பெற்ற நூல்களில் குறுந்தொகை தனித்துவம் மிக்கது. குறுகிய அடிகளில் செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியம் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் புகழ் பெற்றது.
சங்க காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழுந்த மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்கச் சமூக வாழ்வியலில் நிலைபெற்ற கூறுகளான நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, சமூகம், வாழ்வு ஆகியவற்றின் உணர்வு நிலைகளை முன்வைத்தே அமைந்துள்ளது. எனவே இப்பாடல்களை இயற்றிய புலவர்களுள் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் காணப்படும் உணர்வு நிலைகளன்களை மையம் கொண்டு தொல்காப்பிய பொருளதிகாரம் மெய்பாட்டியல் காட்டும் மெய்ப்பாட்டியலை ஒப்பிட்டு ஆய்வதே இவ்வியலின் முதன்மை கருத்தாகும்.
குறுந்தொகையில் பெண்பாற்புலவர்கள்
குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களின் எண்ணிக்கை அறுபத்து இரண்டு அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊண்பித்தைகயார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றியார், காக்கைப் பாடினியார், நச்சௌ;ளையார், நன்னாகையார், வெண்மனிபூதியார், வெண்பூதியார், வெள்ளிவீதியார், பொண்மணியார், காமஞ்சேர் குளத்தார், நல்வெள்ளியார், நெடும்பல்லியத்தை, பூங்கண்உத்திரையார், வருதலையாரித்தி ஆகிய 18 பெண்பாற் கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பெண்களும் தங்களுக்கான உணர்வுகளையும் எண்ணன்களையும் வெளிப்படுத்தி இருப்பதை அறிந்தாலும் அவர்கள் முழுமையாக தன் உணர்வை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.